மகாராஷ்ரா : மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்கள் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. ததர் டிடி, கபுத்தர்கானா, கிங் வட்டம், சாந்தாகுரூஸ், மரோல் மாரோசி மலபார் ஹில், தாராவி, பைகுல்லா, ஆந்தேரி சுரங்கப்பாதை, நாகபடா, ஹிண்ட்மாடா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளம் போல் காட்சியளிக்கறது. இதனால் தாராவி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சையான் ரயில் நிலையத்தில் மழைநீரில் தண்டவாளம் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருக்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.