சென்னை: அரசியல் சட்டத்திற்கு முரணாக ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றுள்ளதாக தி.மு.க, செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல. தி.மு.க., வை மிரட்டும் தொனியில் அரசியல் சாசனத்திற்கு முரணாக ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றுள்ளார். ஆளுநரின் ஆய்வு தொடரும் என்றால் மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க, தொடர்ந்து போராட்டம் நடத்தும்.