லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டிரைக்கால் அத்தியாவசிய பொருள் விலை ஏறி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் லாரி உரிமையாளர்களை மத்திய அரசு உடனே அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்றார். முதல்வர் வழக்கம் போல் நமக்கொன்ன என்று இருக்க கூடாது என்றார். லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: