சென்னை: மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் துறையை சேர்ந்த அனைவரின் துயரிலும் பங்கு கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.