சென்னை: பிளஸ் 1 தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் இணைய தளம் மூலம் இன்று விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 தேர்வு நடந்தது. அந்த தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காதவர்கள், தோல்வி அடைந்தவர்கள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய முடியும் என்று தேர்வுத்துறை தெரிவித்தது. இதையடுத்து இன்று மதியம் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து மாணவர்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.