சென்னை: காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும் மிரட்டுவதை அதிமுக அரசு நிறுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்தை பலியிட்டு இட்லர் பாணி பயங்கரத்துக்கு உயிரூட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இனியும் போலீஸ் மூலம் அச்சுறுத்துவது தொடர்ந்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்துள்ளது.