சென்னை: சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் வழிதடத்தில் இலவச பயணம் அறிவித்ததால் நேற்று மட்டும் 1,20,500 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 25ம் தேதி சென்னையில் சென்ட்ரல்-நேரு பூங்கா மற்றும் சின்னமலை- டிஎம்எஸ் இடையேயான புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரயில் சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 25ம் தேதி முதல் 27ம் தேதி இன்று வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.