சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி மீதும் கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் முதல்வர் டிஜிபி., ஐஜி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டை நியாப்படுத்துவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.