29ம் தேதி கடையடைப்பு போராட்டம்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கு.பால்பாண்டியன் தலைமையில் நேற்று போராட்ட ஆயத்த கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பொது செயலாளர் கு.பழனிபாரதி, கோதண்டம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் சங்க மாநில தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், கு.பால்பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டாஸ்மாக்கில் 15 ஆண்டுகளாக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே, 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாலை 3 மணிக்கு கடையடைப்பு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: