சென்னை : தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபோது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. என்கவுன்டர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக சார்பில் 28ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.