தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் முதல் உலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 27ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை என்றும், முதல் உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் தேசிய மற்றும் பங்கு சந்தைகளுக்கு வேதாந்தா நிறுவனம் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.