குட்கா விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஆவணங்களை பெற்றது சிபிஐ

சென்னை: குட்கா விவகாரம் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிபிஐ பெற்றுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குட்கா குறித்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிபிஐ பெற்றுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: