காஞ்சிபுரம்: டி.என்.பி.எஸ்.சி நடத்திய பொறியாளர் பணிக்கான தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் தேர்வு எழுதியோர் கடும் குழப்பம் அடைந்தனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான அரசு தேர்வு நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் SSKV ஆண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மின்னியல் பாடப்பிரிவுக்கு பதிலாக, மின்னணு தொடர்பியல் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த மாணவர்கள் தேர்வு மையத்திலிருந்த கண்காணிப்பாளர்களிடம் முறையிட்டனர்.