சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள அவரது படத்திற்கு தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.