தர்மபுரி: தொப்பூர் அருகே பண்டைய கால நாணயம் கண்டுபிடிப்பு எதிரொலியாக தர்மபுரி, கர்நாடகா வரலாற்று பேராசிரியர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்மியம்பட்டியை சேர்ந்த விவசாயி கிருபாகரன் (35). இவருக்கு சொந்த நிலத்தில் கடந்த வாரம் மாடுகளை கொண்டு ஏர்உழவு செய்த போது பழங்காலத்து நாணயம் 5 கிடைத்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் அவரது ஆய்வு குழு மாணவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஐந்தும் செம்பு நாணயம் எனவும், பாண்டியர் கால, திப்பு சுல்தான் காலத்தை சேர்ந்தது என்பது தெரிய வந்தது.