உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி பேச்சு

மேகாலயா: கத்தாரில் கால்பந்து போட்டி நடக்கிறது, இங்கு நாம் வளர்ச்சிக்கான போட்டியில் இருக்கிறோம்; வெளிநாட்டு கால்பந்து அணிக்காக நாம் குரல் கொடுத்து வருகிறோம்; ஆனால், இந்தியா இதுபோன்ற சர்வதேச போட்டிகளை நடத்தும் நாள் தொலைவில் இல்லை என மேகாலயாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலககோப்பைக்கு போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கால்பந்து உலககோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் அர்ஜன்டினா – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.   இந்நிலையில் இன்று மேகாலய ஷில்லாங்கில் ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பிரதமர் மோடி பேசியதாவது; கத்தாரில் கால்பந்து உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடக்கிறது என்றும் இங்கு நாம் வளர்ச்சிக்கான போட்டிகள் இருக்கிறோம் என்றும் வெளிநாட்டு கால்பந்து அணிக்காக நாம் குரல் கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் கத்தாரில் கால்பந்து போட்டி நடக்கிறது, இங்கு நாம் வளர்ச்சிக்கான போட்டியில் இருக்கிறோம்; வெளிநாட்டு கால்பந்து அணிக்காக நாம் குரல் கொடுத்து வருகிறோம்; ஆனால், இந்தியா இதுபோன்ற சர்வதேச போட்டிகளை நடத்தும் நாள் தொலைவில் இல்லை என மேகாலயாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். …

The post உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: