நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடித்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம், 1,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் சுமதி என்ற கேரக்டரில் நடித்திருந்த தீபிகா படுகோன், திடீரென்று இப்படத்தில் நடிக்க முடியாது என்று விலகினார்.
படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற பாலிசி உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாகவும், தயாரிப்பு நிறுவனம் அதை ஏற்காததால் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறொரு நடிகையிடம் பேசி வருகின்றனர். ஆனால், அனுஷ்கா ஷெட்டியை மீண்டும் தனது ஜோடியாக நடிக்க வைக்க பிரபாஸ் தீவிர முயற்சி செய்து வருகிறார். முன்னதாக அலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோரிடம் படக்குழு பேசி வருவதாக கூறப்பட்டது. தற்போது சாய் பல்லவியிடம் பேசுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று தெரிகிறது.
