- ஜானகி
- ஆகாஷ் பிரபு
- ஹரிகிருஷ்ணன்
- ராஜேஷ்
- அருன் குமார்
- கே.ஜே. சுரேந்தர்
- செல்ஃப்ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ்
- எட்வின் சகாய்
- நந்தா
- வினோத் சிவகுமார்
- மார்ட்டின்
- விவேகா
- பத்மாவதி
- கிரிஷ்

வரும் 23ம் தேதி திரைக்கு வரும் படம், ‘மாயபிம்பம்’. இதில் புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் நடித்துள்ளனர். செல்ஃப்ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே.சுரேந்தர் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, நந்தா இசை அமைத்துள்ளார். வினோத் சிவகுமார் எடிட்டிங் செய்ய, மார்ட்டின் அரங்கம் அமைத்துள்ளார். விவேகா, பத்மாவதி பாடல்கள் எழுதியுள்ளனர். கிரிஷ் நடனப் பயிற்சி அளித்துள்ளார். படம் குறித்து கே.ேஜ.சுரேந்தர் கூறுகையில், ‘புதுமுகங்களை வைத்து படத்தை உருவாக்குவது என்பது, நம் வாழ்க்கையை பணயம் வைப்பதற்கு சமமானது. ‘சேது’ என்ற படம், வியாபாரத்துக்காக அதிகமாக திரையிடப்பட்ட படம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அந்த சாதனைக்கு ஈடாக எனது படமும் 110 முறை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
பார்ப்பார்கள், போய் பேசுகிறேன் என்று சொல்வார்கள். பிறகு கண்டுகொள்ளவே மாட்டார்கள். பல்வேறு போராட்டங்களை தாண்டி படத்தை தயாரித்துள்ள நானே இப்போது ரிலீஸ் செய்கிறேன். கண்டிப்பாக ரசிகர்களை ‘மாயபிம்பம்’ வசப்படுத்தும். எனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளேன். முன்னணி இயக்குனர்கள் பலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர். தெற்றுப்பல் அல்லது ஏதாவது ஒரு அம்சம் ஹீரோயினுக்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று பல பெண்களை பார்த்து, இக்கதையை கண்கள் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு ஹீரோயினை தேர்வு செய்தேன்.
படத்தின் புரமோஷனுக்கு கூட இதில் நடித்திருப்பவர்கள் வரவில்லை. எப்போதுமே ஜெயிக்கிறேன் என்பதைவிட, ெஜயித்துக் காட்டிய பிறகுதான் எல்லோரும் வருவார்கள் என்று நினைக்கிறேன்’ என்று வருத்தப்பட்டார்.

