சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோம்பு பள்ளம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று மாலை, வகுப்பு முடிந்ததும் மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரை நெகமம் புதூர் பகுதியில் டிரைவர் இறக்கி விட்டார். பின்னர் மீண்டும் பள்ளிக்கு வேன் புறப்பட்டது. இக்கரை நெகமம் புதூர் பகுதியில் உள்ள பள்ளம் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் வேனில் மாணவர்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது….

The post சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: