மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுக்க கண் விழித்து சிவனை வணங்கி அவன் மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருப்போருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இன்று நீங்கள் ஜபிக்கவேண்டிய முக்கியமான மந்திரம் இதோ. பஞ்சாச்சரமாக விளங்கும் “நமசிவாய” என்னும் மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் உண்டு.