மண்ணே மாணிக்கம்
பயிரெலாம் பசுந்தங்கம்
காளைகள் மணிமுத்துகலப்பை வைடூரியம்
வியர்வை வைரமணியில்விளையும் நெல்மணிகள்விவசாயம் சொத்தாகும்விவசாயி உறவாகும்! வரப்புமேல் வளர்ந்தாலும்வரம்புமீறாத கதிர்பெண்அடக்கத்துடன் தலைகுனிந்துஅறுவடைக்கு காத்திருப்பாள்பருவபயிரும் பெண்ணும்படைப்பில் ஒன்றல்லவாபோத்து நடவு அல்லவாபட்டிக்காடு சொர்க்கமல்லவா! பொங்கப்பானை புத்தரிசிபொங்கிடும் பனிப்புகைபறந்து வான்கலந்துபவனிவரும் தைமேகம்பகலவனை கண்டுமகிழபருவத்தில் மழைபெய்துபாரெங்கும் வளம்பெருகும்பாமரர் வாசல் பொன்வரும்! கட்டுடலிருக்க காளைகளமிருக்கசிட்டுதுணையிருக்க தெம்மாங்கு பாட்டிருக்கதெள்ளுதமிழாய் மனமினிக்கதங்கப்பயிர் பூத்துக்குலுங்கபூமியே வைகுண்டம்புன்னகையே நாராயணன்பழையசோறு உணவாகும்பரமனுக்கு அமுதாகும்! பச்சை பயிரெங்கும்பரந்தாமன் குறுநகைஇசைக்கும் திருப்பாவைவாய்க்கால் தண்ணீர்!பரந்தமரமதில் சைவகிளிகள்திருவெம்பாவை பாடும்திருக்காட்சி காண தேவரும்திருவயல் விவசாயி ஆகிடுவர்! ஒருபொழுது உண்டுஒட்டிய வயிறுடன்ஓயாமல் உழைக்கும்விவசாயிக்கு தினம் ஏகாதசிபரம்பொருள் இறங்கிவந்துபக்கத்தில் நின்றவன்வியர்வையில் குளிக்கிறான்கண்ணீரை துடைக்கிறான்!
விஷ்ணுதாசன்