கணபதி துதி
அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனேஇனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனேஎவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே ஐங்கரனே அருள் புரிவாய்.
காப்பு ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனைஇருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியைசபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனைதினம் தினம் போற்றி பணிந்திடுவோம்(ஐயப்ப தேவன் கவசம் இதனை அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் தினம் தினம் துதிக்க தீரும் வினை எல்லாம் நாடிய பொருளும் நலமும் வருமே.
நூல் மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய மணிகண்ட தேவா வருக வருகமாயோன் மைந்தா வருக வருக ஐங்கரன் சோதரா ஐயப்பா வருகபுலிவாகனனே வருக வருக புவியெல்லாம் காத்திட வருக வருகபூரணை நாதனே வருக வருக புண்ணிய மூர்த்தியே வருக வருக பூதநாயகா வருக வருக புஷ்கலை பதியே வருக வருகபொன்னம்பலதுறை ஈசா வருக அடியாரை காக்க அன்புடன் வருகவருக வருக வாசவன் மைந்தா வருக வருக வீரமணிகண்டாவஞ்சனை நீக்கிட வருக வருக வல்வினை போக்கிட வருக வருக ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக அச்சம் அகற்றிட அன்பனே வருகஇரு வினை களைந்தே எனையாட்கொள்ள இருமூர்த்தி மைந்தா வருக வருகபதினென்படியை மனதில் நினைக்க பண்ணிய பாவம் பொடி பொடியாகும்ஐயப்ப சரணம் என்றே சொல்லிட ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமேசபரிகிரிசனை நினைத்தே நீரிட துன்பங்கள் யாவும் தூள் தூள் ஆகும்சரணம் சரணம் என்றே சொல்லிட சித்திகள் யாவும் வந்தடைந்திடுமேபம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும் பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க அவனியில் உள்ளோர் அடிபணிந்தேத்துவார் சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சபரிகிரீசாசரணம் சரணம் சற்குருநாதா சரணம் சரணம் சுவாமியே சரணம்
வேண்டுதல் சிவனார் மகன் என் சிரசினை காக்க நெடுமால் மைந்தன் நெற்றியை காக்ககஜமுகன் தம்பி என் கண்ணினை காக்க நாரணன் பாலன் நாசியை காக்கஇருமூர்த்தி மைந்தன் என் இருசெவி காக்க வாபரின் தோழன் வாயினை காக்கபம்பையின் பாலன் பற்களை காக்க நான்முக பூஜிதன் நாவினை காக்க கலியுக வரதன் என் கழுத்தினை காக்க குமரன் தம்பி என் குரல்வளை காக்கபுஷ்களை நாதன் புஜங்களை காக்க முக்கண்ணன் பாலன் முழங்கையை காக்கவீரமணிகண்டன் விரல்களை காக்க கயிலைமைந்தன் என் கைகளை காக்கமணிகண்ட தேவன் மார்பினை காக்க வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க முழுமுதற் கடவுள் என் முதுகினை காக்க இருமுடிபிரியன் என் இடுப்பினைக் காக்கபிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க தர்மசாஸ்தா என் துடைதனைக் காக்கமுருகன் சோதரன் முழங்கால் காக்க கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்கபந்தள பாலன் பாதத்தினைக் காக்க விஜயகுமாரன் விரல்களைக் காக்க அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்ககாட்டாள ரூபி காலையில் காக்க நவக்கிரக நாதன் நடுப்பகல் காக்கமாலின் மகனார் மாலையில் காக்க அரிகர சுதனார் அந்தியில் காக்கஇன்பமய ஜோதி இரவினில் காக்க எரிமேலி சாஸ்தா என்றுமே காக்க அரியின் மகனார் அனுதினம் காக்க நடராஜ பாலன் நாள்தோறும் காக்கவாசவன் செல்வன் வலப்புறம் காக்க இருமுடி ஈசன் இடப்புறம் காக்ககாக்க காக்க கருணையால் காக்க பார்க்க பார்க்க என்பாவம் பொடிபடஇம்மையும் மறுமையும் இல்லாதொழிந்திட ஈசன் மகன் எனை என்றுமே காக்க கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும் குருதியை குடிக்கும் துஷ்டப் பேய்களும்காந்தமலை தன்னை கருத்தில் கொண்டிட கலங்கி மறைந்திட கருணை புரிவாய்பில்லி சூனியம் பலவித வஞ்சனை பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்பஞ்சசய்ப் பறக்க வரமெனக் அருள்வாய் பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய் வாதம் பித்தம் சிலட்சுமத்துடனே வாந்தியும் பேதியும் வலிப்பும் சுளுக்கும்எவ்வித நோயும் எனையணு காமல் என்றுமே காப்பாய் எரிமேலி தேவாகல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும் நல்லோர் உணர்வும் நாளும் அருள்வாய்நல்ல மனதுடன் உனை நான் துதிக்க நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா காமம் குரோதம் லோபம் மோகம் மதமாச் சர்யமெனும் ஐம்பெரும் பேய்களும்என்றும் என்னை அணுகிவிடாமல் ஐயப்பா தேவா வரமெனக் கருள்வாய்சூது பொறாமை பொய் கோபமில்லாமல் சோரம் லோபம் துன்மார்க்கம் அல்லாமல்வேத நெறிதனை விலகி நில்லாமல் வீரமணிகண்டா வரமெனக் கருள்வாய் மூப்பும் பிணியும் வறுமையும் பசியும் வந்தெனை வாட்டி வதை செய்யாமல்உள்ளன்புடனே உன்திரு நாமம் அனுதினம் சொல்ல அருள் தருவாயே நமஸ்காரம் அரிகர புத்திரா அன்பா நமோ நமோ சபரிகிரிசா சாஸ்தா நமோ நமோபதினெண் படிவாழ் பரமா நமோ நமோ ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோபொன்னம்பலத்துறை புண்ணியா நமோ நமோ புலிப்பால் ஈந்த புதல்வா நமோ நமோசுரிகாயுதமுடை சுந்தரா நமோ நமோ மகிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ சரணம் சரணம் சபரிகிரிசா சரணம் சரணம் சத்திய சொருபாசரணம் சரணம் சர்வ தயாளா சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.ந.பரணிகுமார்