தேவையான பொருட்கள்
தினை அரிசி -200 கிராம், புழுங்கல் அரிசி -100 கிராம்,
துவரம் பருப்பு -100 கிராம், உளுத்தம் பருப்பு -100 கிராம், கடலைப்பருப்பு -100 கிராம், காய்ந்த மிளகாய் -4, வெந்தயம் -4 கிராம், இஞ்சி -4 கிராம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:தினை அரிசி, புழுங்கல்அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அவற்றுடன் காய்ந்த மிளகாய், வெந்தயம், இஞ்சி, உப்பு சேர்த்து சிறு குருனையாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை தோசைக்கல்லில் அடையாகத் தட்டி இருபுறமும் வேக வைத்து எடுக்கவேண்டும். மணமணக்கும் தினை அடை தயார்.