×

‘வேள்பாரி’ நாவலை திருடுவதா? இயக்குனர் ஷங்கர் கடும் எச்சரிக்கை

சென்னை: ராம் சரண், கியாரா அத்வானி நடித்த ‘கேம் சேஞ்சர்’ என்ற பான் இந்தியா படத்தை ஷங்கர் இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3’ படத்துக்கான பணிகளில் ஈடுபடும் ஷங்கர், எழுத்தாளரும் மற்றும் எம்.பியுமான சு.வெங்க டேசன் எழுதிய ’நவயுக நாயகன் வேள்பாரி’ என்ற நாவலைப் படமாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது எக்ஸ் தளத்தில் ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சு.வெங்கடேசனின் தமிழ் நாவலான ‘நவயுக நாயகன் வேள்பாரி’யின் பதிப்புரிமை வைத்திருப்பவராக, இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதியின்றி பல படங்களில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்து அதிக வருத்தம் அடைகிறேன்.

சமீபத்தில் ஒரு படத்தின் டிரைலரில், இந்நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டதைப் பார்த்து வேதனையாக இருக்கிறது. தயவுசெய்து இந்நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப்சீரிஸ் மற்றும் எந்த ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள். அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம். மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ‘வேள்பாரி’ நாவலை திருடுவதா? இயக்குனர் ஷங்கர் கடும் எச்சரிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shankar ,Chennai ,Pan ,India ,Ram Charan ,Kiara Advani ,Kamal Haasan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை...