கருப்பூர் காளியம்மன் கோயிலில் தீமிதி விழா

ஓமலூர்: ஓமலூரை அடுத்துள்ள கருப்பூரில், காளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்த வந்தது. நேற்று முன்தினம், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு தீமிதி விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் குழந்தைகளை எடுத்து கொண்டு தீ மிதித்தனர். விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வதால், மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: