கொடைக்கானல்: கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கொடைக்கானலை அடுத்து உள்ளது பண்ணைக்காடு. இங்கு உள்ள மயான காளியம்மன் கோயிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 ஆலடிப்பட்டி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து தேவதைகளுக்கு கனி வைத்து தீர்த்தங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.