பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூக ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தி செய்யப்பட்டது. மறுநாள் கோயிலில் அதிகாலை கணபதி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து கோபுர சிலைகள் கண் திறத்தல், விமான கலசம் அமைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகளும், நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றது.