திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து மூன்றாம் நாளான நேற்று நம்பெருமாள் ஒய்யார சவுரிகொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 8ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தில் 3ம் நாள் திருவிழாவான நேற்று நம்பெருமாள் ஒய்யார சவுரிகொண்டை அலங்காரத்தில் ரத்தின அபயஹஸ்தம், பெருமாள், மகாலட்சுமி பதக்கம், அண்டபேரண்டபக்சி பதக்கம், வைர ஒட்டியாணம், தங்ககாசு மாலை, முத்து, பவள மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார்.