குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஏகாதசி விழா

பாலக்காடு: கேரளா மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி திருவிழா நேற்று நடைபெற்றது.  கார்த்திகை மாதம் ஏகாதசி நாளில் குருவாயூர் கிருஷ்ணர் பிரதிஷ்டை செய்த நாளை குருவாயூரில் ஏகாதசி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இஇருந்து கோவில் பிரசாதத்தை சாப்பிட்டனர்.  முன்னதாக நேற்று காலை கோவிலின் கிழக்கு கோபுர நடை பந்தலில் இருந்து பஞ்சவாத்யங்கள் முழங்க மூன்று யானைகள் மீது உற்சவர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: