பழநி: விடுமுறை தினத்தின் காரணமாக பழநி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விடுமுறை தினத்தின் காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகையும் சேர்ந்ததால் அதிகாலை முதலே மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.