வரத்து அதிகரிப்பால் புடலங்காய் விலை சரிவு

திருப்பூர் : திருப்பூர் பல்லடம் சாலையில் இயங்கி வரும் தென்னம்பாளையம் சந்தைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தென்னம்பாளையம் சந்தைக்கு புடலங்காய் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலையும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: புடலங்காய் வரத்து குறைவாக இருந்த வாரத்தில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. உரிய விலையும் கிடைத்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், புடலங்காய் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு பை ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post வரத்து அதிகரிப்பால் புடலங்காய் விலை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: