திசைகளுக்கேற்ப தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்று போற்றப்படுகிறது. இம்மலையை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பார்த்தால் கைலாயம் போன்றும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பார்த்தால் பெரும்பாறை போன்றும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப்பார்த்தால் பெரிய சிவலிங்கம் போன்றும் காட்சி தரும் அதிசயத்தைத் தரிசிக்கலாம். இத்தலத்தில் முருகனின் வாகனமாக ஐராவதம் யானை அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

Related Stories: