பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில்,இன்று நடந்த பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து மூலவரை வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலில், இன்று பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.பகல் 12:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதாலும், மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பொதுவழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்….

The post பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: