×

நடிகர்கள் திலீப் குமார், ராஜ் கபூர் வீடுகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு; பாகிஸ்தான் மாகாண அரசு நடவடிக்கை

பெஷாவர்: பாகிஸ்தானில் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட பிரபல இந்திய திரைப்பட நடிகர்கள் திலீப்குமார், ராஜ் கபூர் வீடுகளை பாதுகாப்பதற்காக பெஷாவர் மாகாண அரசு ரூ.3.38கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகர்களான திலீப்குமார் மற்றும் ராஜ் கபூர் ஆகியோர் பெஷாவரில் பிறந்து வளர்ந்தவர்கள்.

பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்த இவர்கள் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனராக இருந்தார்கள். இவர்களுக்கு சொந்தமான வீடுகள் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ளன. இந்த வீடுகள் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பாரம்பரிய தளங்களாக அறிவித்தார்.

இந்நிலையில் பெஷாவரில் உள்ள இந்த வீடுகளை பராமரித்து பாதுகாப்பதற்காக மாகாண அரசு ரூ.3.38கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாகாண முதல்வர் அலி அமின் கந்தாபூர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதி ஒதுக்கீடுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் கேஐடிஇ திட்டத்தின் கீழ் மாகாணத்தில் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கான முக்கிய திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

The post நடிகர்கள் திலீப் குமார், ராஜ் கபூர் வீடுகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு; பாகிஸ்தான் மாகாண அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dilip Kumar ,Raj Kapoor ,Pakistan provincial government ,Peshawar ,Peshawar provincial government ,Pakistan ,Peshawar… ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்