இதைத்தொடர்ந்து இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்தார். இன்று காலை பேரூர் ஆதீனம் மடத்துக்கு சென்றார். அங்கு பேரூர் ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.
விழாவில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மோகன் பகவத்துக்கு முருகப்பெருமானின் வேல் கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பேரூர் படித்துறைக்கு சென்ற மோகன்பகவத், நொய்யல் ஆற்றை பார்வையிட்டார். பின்னர் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார்.
The post ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக மாஜி அமைச்சர் பங்கேற்பு: மோகன் பகவத்துக்கு வேல் பரிசு appeared first on Dinakaran.
