தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 75 புகார் மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், எஸ்பி அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஏடிஎஸ்பி தரன் தலைமை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 75 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 75 மனுக்கள் மீதும் உடனடியாக விசாரணை முடித்து வைக்கப்பட்டது. நேற்றைய முகாமில் புதியதாக 33 மனுக்கள் பெறப்பட்டது. இதில் டிஎஸ்பிக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
The post குறை தீர்க்கும் முகாமில் 75 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.
