மது பதுக்கி விற்ற வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, மே 6: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பையர்நத்தம் பகுதியில் பொம்மிடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சாக்கு மூட்டையுடன் சுற்றிக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததார். இதையடுத்து, அவர் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது, அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(48) என்பதும், கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 76 கர்நாடக மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது பதுக்கி விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: