- தெப்பம் வேலைவாய்ப்பு அலுவலகம்
- திருவாரூர்
- கலெக்டர்
- மோகனச்சந்திரன்
- திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திருவாரூர், ஏப். 29: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3, நேர்முக உதவியாளர் சுருக்கெழுத்து தட்டச்சர், தனிச்செயர், இளநிலைசெயல் பணியாளர், பால் அளவையாளர் நிலை-ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், முதுநிலை தொழிற்சாலை உதவியளர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வன காவலர், வனக் காவலர் பழங்குடியின இளைஞர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 935 பணியிடங்களுக்கு கடந்த 25ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
The post 2,500 சதுர அடி பரப்பில் உருவாகும் தெப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.