×

பொதுக்கழிப்பறையை சீரமைக்க வேண்டும்

 

கும்பகோணம், ஏப்.29: கும்பகோணம் அருகே பாபநாசம் திருப்பாலைத்துறை நியாயவிலைக் கடை அருகே சேதமடைந்துள்ள கழிவறையை உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பாபநாசம் நுகர்வோர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திற்கு தஞ்சாவூர் மாவ ட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமை ப்பு சார்பில் கோரிக்கை மனு அனு ப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,பாபநாசம் திருப்பாலைத்துறை தெய்வானை நகரில், தமிழக அரசின் நியாயவிலைக்கடை உள்ளது. அங்கு தினசரி நூற்றுக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களும் பெண்களும் வந்து செல்கிறார்கள். இருந்தும், அவசர அவசியம் கருதி, அவ்விடத்தில் கழிவறை வசதி இல்லை. மேலும், அந்த நியாய விலைக்கடையில், கடை பணியாளர் மற்றும் உதவியாளர் இருவரும் பெண்களே. அவர்கள் காலையிலிருந்து மாலை வரை கடையில் பணிபுரிவதால், அவர்களுக்கும் கழிவறை வசதி மிக அவசியம். அந்த கடை அருகே ஒரு கழிவறை உள்ளது. அது சுகாதாரமற்று, சேதமடைந்து இடிந்துவிழும் தருவாயில் உள்ளது. தண்ணீர் வசதியும் இல்லை. எனவே, சேதமடைந்த கழிவறையை உடனே கட்டித்தரவேண்டும், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிறை ஏற்படுத்தித்தரவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

The post பொதுக்கழிப்பறையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Papanasam Consumers' Association ,Papanasam Thiruppalaithura Fair Price Shop ,Thanjavur District ,Collector ,Priyanka… ,Dinakaran ,
× RELATED திமுகவின் 4 ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கையடக்க புத்தகங்கள்