காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

 

பொன்னமராவதி, ஏப்.29: பொன்னமராவதி அருகே காரையூர் பகுதிக்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் உள்ள தீயணைப்பு நிலையம் தாலுகாவில் உள்ள 42கிராம ஊராட்சி 200க்கும் மேற்பட்ட கிராமங்களின் அவசர தேவைகளுக்கு சேவை செய்கின்றனர். ஆனால், பொன்னமராவதியில் இருந்து 15 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள காரையூர் பகுதிக்கு செல்வதற்குள் தீ விபத்து ஏற்பட்ட வீடு, காடு முழுவதும் எரிந்து சேதமடைகின்றன. எனவே, காரையூர் பகுதியில் உள்ள காரையூர், மேலத்தானியம், சடையம்பட்டி, ஒலியமங்ளம், அரசமலை உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காரையூரில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைத்து தீவிபத்துகளை தடுக்க உதவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: