தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளார். இந்தாண்டு, 23 பெண்கள், 10 வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகறது. இவ்விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
The post நடிகர் அஜித் குமார் உட்பட 113 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி இன்று மாலை வழங்குகிறார் appeared first on Dinakaran.
