கவுகாத்தி: அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்பியான கவுரவ் கோகயின் மனைவி எலிசபெத் கால்பர்ன் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கு எனது கேள்விகள் என்ற தலைப்பில் ஹிமந்தா சர்மா நேற்று வெளியிட்ட பதிவில், காங்கிரசை சேர்ந்த ஒரு எம்பி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து 15 நாட்கள் தங்கினாரா? அப்படியானால் அந்த சுற்று பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கம் தர முடியுமா? எம்பியின் மனைவி பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்பிடம் இருந்து சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது.இந்தியாவில் உள்ள செயல்பாடுகளுக்காக பாகிஸ்தான் நிறுவனம் எதற்கு சம்பளம் தர வேண்டும். அந்த எம்பியின் மனைவி மற்றும் 2 குழந்தைகளின் குடியுரிமை நிலை என்ன. அவர்கள் இந்தியர்களா ? என குறிப்பிட்டுள்ளார்.
The post 15 நாட்கள் பாகிஸ்தானில் காங். எம்பி தங்கி இருந்தது ஏன்..? அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா கேள்வி appeared first on Dinakaran.