தர்மபுரி, ஏப்.25: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை வடக்கத்தியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஓலாரி நரசிம்மன்(60), விவசாயி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓலாரி நரசிம்மன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் பழைய இரும்பு பெட்டியில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி ஓலாரி நரசிம்மன், அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்றவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
The post விவசாயி வீட்டில் 12 பவுன் திருட்டு மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.
