- வடமதுரை
- திருப்பதி
- கோடகிபட்டி
- நத்தம்
- திண்டுக்கல்
- எஸ். குரும்பபட்டி
- திண்டுக்கல்-செந்துறை சாலை
- சங்கன்
- பாண்டியனூர்…
- வான்
வடமதுரை, ஏப். 24: நத்தம் அருகேயுள்ள குடகிபட்டியை சேர்ந்தவர் திருப்பதி (30). இவர் சம்பவத்தன்று டூவீலரில் திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். திண்டுக்கல்- செந்துறை சாலை எஸ்.குரும்பபட்டி பகுதியில் வந்த போது எதிரே பாண்டியனூரை சேர்ந்த சங்கன் ஓட்டி வந்த வேன் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருப்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வடமதுரை எஸ்ஐ பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.
The post வேன் மோதி வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.
