வருசநாடு, ஏப். 18:தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு, வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், வீரசின்னம்மாள்புரம், வண்டியூர் காமராஜபுரம், முருக்கோடை ஆகிய பகுதிகளில் சிலர் வீடு, வீடாகச் சென்று கழுதைப்பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கு ஒன்று ரூ.50 முதல் 100 வரை விற்கப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கி அருந்துகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘‘பெரம்பலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் ஆண்டுதோறும் கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொருவரும் 5 முதல் 10 கழுதைகளை இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். கழுதை பால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். இருமல், சளி, ஜலதோஷம், வயிற்றுப்புண் உள்ளிட்டவற்றை குணமாக்கும்’’ என்றனர்.
The post உடல் உஷ்ணத்தை தணிப்பதால் கழுதைப் பால் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.
