ஓசூர் உழவர் சந்தை முன் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

*தடுக்க கோரிக்கை

ஓசூர் : ஓசூர் உழவர் சந்தை முன்பு, சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதால், அதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் மாநகரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எருமைகள், மாடுகள் பிரதான சாலைகள் மற்றும் உழவர் சந்தை முன்பு சுற்றித் திரிகிறது.

சாலையில் வரும் வாகன ஓட்டிகள், மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. தற்போது ஓசூர் உழவர் சந்தை முன்பு தினமும், பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் காய்கறிகள், கீரைகளை சாப்பிட வருகிறது. இந்த மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு குறுக்கே நுழைந்து வருவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது.

அதிவேகமாக வரும் வாகனங்கள் திடீரென பிரேக் போடும் போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு விபத்து நிகழ்கிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு, கால்நடை உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓசூர் உழவர் சந்தை முன் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: