டெல்லி: நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து தீவிரவாதி தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டார். 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் தங்கியிருந்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் நாடு கடத்தலை எதிர்த்து தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார். மேலும் தஹாவூர் ராணா இந்தியா கொண்டு வரப்பட்டவுடன் மும்பை அல்லது டெல்லி சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தஹாவூர் ராணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
The post நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை விசாரிக்க என்ஐஏ திட்டம் appeared first on Dinakaran.