திருவாரூர், ஏப். 10: திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுதினம் (12ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில், திருவாரூர் தாலுகா சேமங்கலம் கிராமத்தில் திருவாரூர் ஆர்.டி.ஒ தலைமையிலும், நன்னிலம் தாலுகா சலிப்பேரி கிராமத்தில் திருவாரூர் சரக துணை பதிவாளர் தலைமையிலும், குடவாசல் தாலுகா அன்னவாசல் கிராமத்தில் திருவாரூர் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா பூனாயிருப்பு கிராமத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுக்கா சித்தமல்லி கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி தாலுகா துளசேந்திரபுரம் கிராமத்தில் மன்னார்குடி ஆர்.டி.ஒ தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுக்கா ஆண்டாங்கரை கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா மணக்கரை கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா வெங்கத்தாங்குடி கிராமத்தில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்பஅட்டைகோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனுஅளித்து பயன்பெறலாம். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
The post நாளை மறுநாள் நடக்கிறது; பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.