தோட்டியோடு அருகே மினி டெம்போ மோதி 2 மாணவர்கள் படுகாயம்

 

திங்கள்சந்தை, ஏப். 10: தக்கலை அருகே குமாரபுரம் செம்பருத்திவிளையை சேர்ந்தவர் ரெஞ்சித் (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் குமாரபுரம் பகுதியை சேர்ந்த அனீஸ் ராஜ் (19) என்பவரும் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 2 பேரும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

தோட்டியோடு ஜங்ஷன் தாண்டி வந்தபோது அந்த வழியாக வந்த மினி டெம்போ பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரெஞ்சித் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தோட்டியோடு அருகே மினி டெம்போ மோதி 2 மாணவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: