அரச குடும்பத்தில் பிறந்தவர் மகாவீரர், ஆயினும் அரச குடும்பச் செல்வச் செழிப்பை வெறுத்தவர். ஏழை, எளியோரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை உணர்ந்து அவர்கள் மேம்பாட்டிற்காகச் சிந்தித்தவர். உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம், கொல்லாமை முதலான உயரிய கொள்கைகளை உலகுக்குப் போதித்தவர்.
உயிர்களிடத்து அன்பு செலுத்தி, இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து வாழவேண்டும் என்னும் மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிறுத்தி மகாவீரர் ஜெயந்தியினைக் கொண்டாடும் சமண சமய மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் கூறி மகிழ்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மகாவீரர் பிறந்த நாள் முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.